Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா மருந்தை பயன்படுத்தி ஆக.15 முதல் சிகிச்சை சாத்தியமா?

கொரோனா மருந்தை பயன்படுத்தி ஆக.15 முதல் சிகிச்சை சாத்தியமா?
, வெள்ளி, 3 ஜூலை 2020 (10:00 IST)
கொரோனா மருந்தை பயன்படுத்தி ஆக.15 முதல் சிகிச்சை துவங்குவதற்கான சோதனை ஜூலை 7 முதல் துவங்கப்பட உள்ளது. 
 
இந்தியாவில் ஒரே நாளில் 21 அயிரத்திற்கும் மேற்பட்டோர்ப் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,79,892 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க உலக நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும்  covaxin TM என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இந்த மருந்தை மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனையடுத்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து BBV152 என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது ஐசிஎம்ஆர். ஜூலை 7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. சோதனை முயற்சி வெற்றிபெற்றால் ஆக.15 முதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்புகள்! – 18 ஆயிரத்திற்கு அதிகமான உயிரிழப்புகள்