பாகிஸ்தானில் நடந்த தாக்குதலை அடுத்து, இந்தியா சிந்து நதிநீரை நிறுத்திவிட்ட நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து சிந்து நதியை திறந்துவிட வேண்டும் என கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், எத்தனை கடிதம் எழுதினாலும் சிந்து நதிநீரை பாகிஸ்தானுக்குத் தர முடியாது என இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்தியாவை தாண்டி பாகிஸ்தானுக்குள் சிந்து நதிநீர் செல்லாவிட்டால், அங்குள்ள வேளாண் உற்பத்தி முதல் மின் உற்பத்தி வரை அனைத்தும் பாதிக்கப்படும். எனவேதான், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறது. மேலும், சர்வதேச அமைப்புகளையும் தனது நட்பு நாடுகளையும் இதற்காக பாகிஸ்தான் அணுகி வருகிறது.
ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும், சிந்துநதி நீர் திறந்து விடுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் மத்திய அரசு உறுதியாக கூறிவிட்டது.
சிந்து நதியில் ரத்த ஆறு ஓடும் என்று பேசியவர்கள் இப்போது கடிதம் எழுதி கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் எத்தனை முறை கடிதம் எழுதினாலும், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்று மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.