Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள போராட்டம்: சிக்கி தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Mahendran
புதன், 10 செப்டம்பர் 2025 (14:18 IST)
நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கடுமையான போராட்டங்களா சுமார் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்டுவர, இந்தியா சிறப்பு விமானங்களை அனுப்ப தயாராகி வருகிறது.
 
காத்மண்டுவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்தியர்களை மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக நேபாள ராணுவத்துடன் இணைந்து, விமானங்கள் தரையிறங்கவும், இந்தியர்களுக்கு பாதுகாப்பான வழியை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
 
 தற்போதைய நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் புதுடெல்லியில் இருந்து அனுப்பப்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நேபாளத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், சிக்கி தவிப்பவர்களுக்காக உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி

டெட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வாக்காளர் அட்டை விவகாரம்: சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை எச்சரிக்கை

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments