Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: இந்திய நிலவரம்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:13 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 5,221 ஆக உயர்ந்துள்ள நிலையில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். 722 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து டெல்லியில் 2,248 பேரும், குஜராத்தில் 2,407 பேரும், ராஜஸ்தானில் 1,888 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,574 ஆக உள்ளது. தமிழகம் 1,629 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 20,471 ஆக உள்ளது. 3,960 பேர் குணமடைந்துள்ள நிலையில் 652 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..!

10-ம் வகுப்பு மாணவரின் மாற்றுச்சான்றிதழில் பெண் குழந்தை புகைப்படம்: பெற்றோர் வாக்குவாதம்..!

ஒரு கோடிக்கு செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்: சேலத்தில் சபீர் என்பவர் கைது..!

தீவிரமாகும் பேருந்து ஓட்டுனர்கள் – போலீஸ் மோதல்? – சென்னையில் மட்டும் 24 அரசு பேருந்துகளுக்கு அபராதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments