Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று 33 கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்

Advertiesment
தமிழகத்தில் இன்று 33 கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்
, புதன், 22 ஏப்ரல் 2020 (18:35 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தமிழக சுகாதாரத் துறை அறிவித்து வரும் நிலையில் சற்று முன் தமிழகத்தில் இன்று மட்டும் 33 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 1629ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று தமிழகத்தில் 1629ஆக பாதிக்கப்பட்ட 33 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 15 பேர்கள் என்றும் தஞ்சையில் 5 பேர்களும், மதுரையில் 4 பேர்களும், அரியலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தலா இருவரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் இதுவரை 662 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18 என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கில் தனியாக சிக்கிய இளைஞர்! முன்பகைக் காரணமாக நடந்த கொலை!