Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகைகளால் பாலியல் தொல்லை: பிரபல நடிகர் புகார்

நடிகைகளால் பாலியல் தொல்லை: பிரபல நடிகர் புகார்
, வியாழன், 14 ஜூன் 2018 (19:16 IST)
பிரபல நடிகர் ரவிகிஷன் நடிகைகளால் பாலியல் தொல்லை நடப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
 
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக கூறி பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த பிரச்சனைக்கு எதிராக அரைநிர்வாண போராட்டம் நடத்தினார். பிரபல நடிகைகள் பார்வதி மேனன், ராதிகா ஆப்தே உள்ளிடவர்கள் இப்பிரச்சனை குறித்து டுவிட்டரிலும், ஊடகங்களிலும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
 
இந்த நிலையில் பிரபல இந்தி, தெலுங்கு நடிகரும், ஸ்கேட்ச் படத்தின் வில்லனுமான ரவிகிஷன் நடிகைகளால் நடிகர்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறியிருக்கிறார்:-
 
“ சினிமாவில் பட வாய்ப்புகளுக்காக  நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இதே காரணத்துக்காக நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. சினிமாவில் புதிதாக நடிக்கவரும் ஆண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 
webdunia
 
நடிகர்களை, சில முன்னணி கதாநாயகிகளும் இது போன்று கொடுமை படுத்துகிறாகள். பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற முடியாது. எதிர்காலத்தில் நிலைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நஸ்ரியா ரீஎண்ட்ரி: ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் டீசர் ரிலீஸ்!