Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி.. கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (14:08 IST)
கர்நாடக மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் வீட்டில் மரத்தில் கட்டு கட்டாக ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் புயல் வேகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வருமானவரித்துறையினர் மாநிலம் முழுவதும் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ஒரு மரத்தில் ஒரு கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினார். 
 
புத்தூர் என்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் குமார் ராய் என்பவரது சகோதரர் வீட்டில் தான் இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அவரது சகோதரரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments