Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பரவும் புதிய மர்ம காய்ச்சல்!

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (15:51 IST)
கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற புது வகை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கேரள மாநிலத்தில் நிபா எனும் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வவ்வால்கள் மூலம் பரவுவதாக கூறப்பட்ட இந்த காய்ச்சல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இதுவரை 18 பேர் நிபா காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வயிற்று வலி மற்றும் கல்லீரல் வீக்கம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு மண் பூச்சிகளால் பரவும் புது வகை காய்ச்சலான கருப்பு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி அவரை திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
கருப்பு காய்ச்சல் போன்ற நோய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் திருச்சூர், மலபூரம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments