Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (15:39 IST)
வட தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 
அக்னி வெயில் முடிந்து சில நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால், இரவில் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.  
 
அந்நிலையில், நேற்று மதியம் சென்னையின் பல பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது. 4 மணி வரை இந்த மழை நீடித்தது. இது சென்னைவாசிகளுக்கு மிகவும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இன்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
இன்று சென்னை மற்றும் புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.  மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தெற்கு அரபிக்கடல் வங்கக்கடலில் தென்மேற்கு பருவகாற்று வலுவாக வீசுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments