Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலைகளில் ரூபாய் நோட்டுகளை வீசிய இளைஞர்! ஐதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (07:02 IST)
ஐதராபாத்தில் ஒரு இளைஞர் திடீரென சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ரூபாய் நோட்டை எடுக்க போட்டி போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காகவும், லைக்ஸ்களை பெறுவதற்காகவும் சிலர் அத்துமீறி ரிஸ்க் எடுத்து வருகின்றனர் என்பதும் சில கிறுக்குத்தனமான செயல்களையும் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஹைதராபாத்  நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் லைக் பெற வேண்டும் என்பதற்காக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் ஹைதராபாத்தில் குட்கட்பள்ளி பகுதியில் திடீரென ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசினார்.

யூட்யூபில் பிரபலமாக இருக்கும் மகாதேவ் என்ற இந்த இளைஞர் செய்த காரியத்தால் அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் தங்களுடைய வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதில் ஈடுபட்டனர்.

இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பொது இடத்தில் அத்துமீறி செய்த காரியம் காரணமாக மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை அடுத்து போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments