Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் கட்சி கொடியில் இருப்பது வாகை மலரா? தூங்கு மூஞ்சி மலரா? தமிழிசை செளந்திரராஜன்

Siva
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (06:54 IST)
விஜய் கட்சி கொடியில் இருப்பது வாகை மலரா? அல்லது தூங்குமூஞ்சி மலரா? என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சியை தொடங்கியது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான், ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் அவர் கொடியேற்றிய முதல் நாளே சர்ச்சைகள் எழுந்துள்ளது என்றும் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியினர் கொடியில் யானை இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் விஜய் கட்சியின் கொடியில் இருந்தது வாகை மலரா? அல்லது தூங்குமூஞ்சி மலரா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது என்றும், நல்லவேளை அதில் வாகை மலர் இருந்தது, ஒருவேளை தாமரை மலர் இருந்தால் நாங்களும் அது குறித்து கருத்து தெரிவித்திருப்போம் என்றும் கூறினார்.

ஒரு கட்சியின் கொள்கைகள் வெளியான பின்னர் தான் விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் கொடி ஏற்றிய உடனே விவாதம் நடப்பது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments