Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்தை திருடி 'காயிலான்' கடையில் விற்ற சகோதரர்கள் கைது!

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (09:11 IST)
ஐதராபாத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்தை திருடி சென்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காயிலான் கடையில் விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
ஐதராபாத் பேருந்து நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 24ஆம் தேதி திடீரென காணாமல் போனது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது இரண்டு இளைஞர்கள் அந்த பேருந்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில் பேருந்தை திருடிய அந்த இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
 
இதனையடுத்து அந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தபோது, திருடி சென்ற பேருந்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு காயிலான் கடையில் ரூ.60 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த இருவரையும் அழைத்து கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அந்த காயிலான் கடைக்கு சென்று பேருந்தின் உடைக்கப்பட்ட பாகங்களை கைப்பற்றினர். காயிலான் கடை உரிமையாளரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments