Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணத்திற்காக நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன் - டெல்லியில் அதிர்ச்சி

Advertiesment
பணத்திற்காக நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன் - டெல்லியில் அதிர்ச்சி
, வியாழன், 2 மார்ச் 2017 (10:32 IST)
பணத்திற்கு ஆசைப்பட்டு தனது மனைவியை 4 வருடமாக, மனவியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


 

 
கிழக்கு டெல்லியில் உள்ள நியூ அசோக் நகரில் வசித்து வரும் 35 வயது பெண்ணிற்கு, அவரின் கணவரின் நண்பர்கள் கடந்த 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவர, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
அப்போது அந்த பெண் கூறியது போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணத்திற்காக ஆசைப்பட்டு தன்னுடைய கணவனே, அவர்கள் நண்பர்களை அழைத்து வந்து, தன்னை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வருவதாகவும், இதுபற்றி வெளியே கூறினால் தனது நான்கு வயது மகனை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்தர். மேலும்,   கடந்த 4 வருடங்களாக இந்த கொடூரத்தை தான் அனுபவித்து வருவதாக கண்ணீர் மல்க கூறினார்.
 
இதையடுத்து, அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.டி.வி.தினகரன் யார்? ; கேள்வி எழுப்பிய தேர்தல் கமிஷன் : ஆடிப்போன சசிகலா