Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!

Siva
புதன், 19 மார்ச் 2025 (17:34 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில், நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்து விட்டு, எந்தவித பதட்டமும் இன்றி காவல்துறையில் சரணடைந்த கணவர் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு, குஞ்சன் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தேக பார்வையுடன் வாழ்ந்து வந்ததாகவும், வேறு தொடர்பு வைத்திருக்கலாம் என்ற மனப்பான்மையுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், தனது மனைவி குஞ்சனுக்காக சந்தீப் நூடுல்ஸ் வாங்கி வந்தார். ஆனால், அதை சாப்பிட முடியாது என்று மனைவி கூறினார். இதனை அடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென, கோபம் கொண்ட சந்தீப் மனைவியை சரமாரியாக தாக்கி கழுத்தை நெறித்தார்.
 
அப்போது, அவருடைய மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதன் பின்னர், தனது மகன்களை அழைத்து, "மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டு, எந்தவித பதட்டமும் இன்றி காவல்துறையினரிடம் சென்று சரணடைந்தார்.
 
இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments