Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு

செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு
, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)
தெலுங்கு டிவி நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றவர்களை “செருப்பால் அடிப்பேன்; இருவரும் பெண்கள், திருமணம் செய்தால் எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்” என்று நடிகை கீதா கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


 

 
நடிகை கீதா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் 31ஆம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கலந்துக்கொண்டனர்.
 
அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர். அந்த திருநங்கை தற்போது, தான் பெண் இல்லை ஆண் தான் என்று கூறினார்.
 
இதில் ஆத்திரமடைந்த நடிகை கீதா, ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா? செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார். அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா? என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.
 
அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறினார்.  
 
மேலும் இவர்களை டிவி நிகழ்ச்சியில் வைத்து அவமதித்தாக கீதாவுக்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பல்லோவில் இருந்த படியே அரசு நிர்வாகத்தை கவனிக்கும் ஜெயலலிதா?