Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பல்லோவில் இருந்த படியே அரசு நிர்வாகத்தை கவனிக்கும் ஜெயலலிதா?

அப்பல்லோவில் இருந்த படியே அரசு நிர்வாகத்தை கவனிக்கும் ஜெயலலிதா?

அப்பல்லோவில் இருந்த படியே அரசு நிர்வாகத்தை கவனிக்கும் ஜெயலலிதா?
, திங்கள், 7 நவம்பர் 2016 (14:41 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபடியே, அரசு நிர்வாகங்களை கவனிப்பதாக, அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியிலிருந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரதாப் ரெட்டி “முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என அவர்தான் முடிவு செய்வார்” என்று கூறினார்.
 
இந்நிலையில், ஜெ.வின் உடல்நிலை பற்றி கருத்து தெரிவித்த சி.ஆர். சரஸ்வதி “அம்மா முழுவதும் குணமாகி விட்டார். தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். மருத்துவமனையில் இருந்தே, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவு போடுகிறார். அரசு நிர்வாகத்தையும் கவனிக்கிறார். 
 
அவரின் உத்தரவுபடி அதிகாரிகளும், அமைச்சர்களும் செயல்பட்டு வருகின்றனர். ஆட்சி நிர்வாகம் நன்றாகவே நடைபெறுகிறது” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீன் குழம்பு சாப்பிட்டு ஒருவர் மரணம் ; 4 பேர் கவலைக்கிடம் : கடலூரில் அதிர்ச்சி