Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் நடத்த எப்படி செலவு செய்கிறார்கள்? ஆண்ட்ரூ டை கேள்வி

ஐபிஎல் நடத்த எப்படி செலவு செய்கிறார்கள்? ஆண்ட்ரூ டை கேள்வி
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:04 IST)
ஐபிஎல் நடத்த எப்படி செலவு செய்கிறார்கள்? ஆண்ட்ரூ டை கேள்வி
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய வீரர் ஒருவர் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையிலும் ஐபிஎல் போட்டிக்காக எப்படி செலவு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒருபக்கம் கொரோனா பாதிப்பால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்த கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த வீரர் ஆண்ட்ரூ டை அவர்கள் சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை அனுமதிக்க மருத்துவமனையில் இடமில்லாத நிலை இந்தியாவில் தற்போது உள்ளது. இந்த சூழலில் நிறுவனங்களும் அரசும் ஐபிஎல் போட்டிகள் நடத்த மட்டும் எப்படி செலவு செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஆண்ட்ரூ டை அவர்களின் இந்த கேள்விக்கு மத்திய அரசும் ஐபிஎல் போட்டியை நடத்தும் நிறுவனங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரும் சனி, ஞாயிறு 2 நாட்களும் முழு ஊரடங்கா?