Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியை மிரட்டும் கொடூர ‘ஜட்டி கேங்’ கும்பல்! – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (12:19 IST)
திருப்பதியில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வரும் ஜட்டி கேங் குறித்து போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பதியில் சமீப காலமாக புறநகர் பகுதிகளில் தனியாக உள்ள வீடுகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த குற்ற செயல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட கும்பலே செய்து வருவதை கண்டு பிடித்துள்ளனர்.

ஜட்டி மட்டுமே அணிந்து கூரிய ஆயுதங்களுடன் வரும் அந்த கும்பல் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளை குறிவைத்து கொலை, கொள்ளை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜட்டி கேங் என பெயரிடப்பட்டுள்ள அந்த கும்பலிடன் ஜாக்கிரதையாக இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் யாராவது காலிங் பெல் அடித்தாலோ, வினோத சத்தம் கேட்டாலோ, தண்ணீர் குழாய் திறந்திருப்பது போன்ற சத்தம் கேட்டாலொ வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் செல்பவர்கள் காவல்துறையிடம் தெரிவித்து விட்டு செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது. இது திருப்பதி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments