Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

Siva
ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (14:54 IST)
இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள் என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
 
நேற்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, "இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தியில் சான்றிதழ் படிக்கின்றனர். எனவே, அந்த விஷயத்தில் நாம் கவலைப்பட தேவையில்லை," என்று அவர் கூறினார்.
 
தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழி கொள்கையை ஏற்க தமிழ்நாடு மறுப்பதால் தான் மத்திய அரசு நிதி மறுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும், "ஹிந்தியை படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற்ற வேண்டும். அந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்தினால் எதிர்வினை ஏற்படும். சுயநல நோக்கங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை," என்றும் அவர் கூறினார்.
 
ஆங்கிலம் ஒரு பொதுவான தேசிய மொழியாக மாற்றப்பட்டால் மாநில மொழிகளின் இருப்பு ஆபத்தில் இருக்கும் என்றும், "நீங்கள் ஹிந்தியை விரும்பவில்லை என்றால் உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும். ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்க முடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழி," என்றும் அவர் கூறினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments