Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

Advertiesment
உயிரிழப்பு

Siva

, ஞாயிறு, 8 ஜூன் 2025 (12:49 IST)
சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஆர்.சி.பி நிகழ்வில் உயிரிழந்த இளைஞரின் தந்தை, "மகனின் கல்லறையை விட்டு வர முடியாது" என்றும், "நானும் இங்கேயே செத்து விடுகிறேன்" என்றும் கூறியதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர், 21 வயது இளைஞர் லட்சுமணன். இவரது தந்தை, தனது மகனின் எதிர்காலத்துக்கு உதவும் என்று ஒரு இடத்தை வாங்கி வைத்திருந்ததாகவும், ஆனால் அந்த இடமே தனது மகனின் கல்லறையாக மாறும் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
 
மகனின் கல்லறை அருகே தலைசாய்த்தபடி அவர் உருக்கமாக, "என் மகனுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது. அவனுக்காக வாங்கிய நிலத்தில் தான் இப்போது அவன் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது," என்று கூறினார். மேலும், "நான் இந்த இடத்தை விட்டு வரமாட்டேன். நானும் இங்கேயே செத்துப் போகிறேன். மகனுடனே நானும் போய்விடுகிறேன்," என்றும் அவர் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார்.
 
இதனை அடுத்து, அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!