Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

Mahendran
வியாழன், 4 ஜூலை 2024 (16:44 IST)
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அலிகார் ஐஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் நிகழ்ந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 121 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளார் என்பதன் அந்த குழு தற்போது விசாரணையை தொடங்கிவிட்டது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இது குறித்து ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வந்ததில் தற்போது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேரை கைது செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன பிரகாஷ் மதுகர் என்பவரை வலைவீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments