Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

Advertiesment
இந்திய ராணுவம்

Siva

, செவ்வாய், 20 மே 2025 (18:11 IST)
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசிய விட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், ஹரியானா மாநில உள்துறை செயலாளர் சுனிதா மிஸ்ரா இது குறித்து கூறிய போது, "அனைத்து YouTube சேனல்களும் கண்காணிக்கப்படும்" என்றும், "சில சந்தேகப்படும் வகையான YouTube சேனல்களின் மீது விசாரணை நடத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஜோதி மல்கோத்ரா பங்களாதேஷ், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், குறிப்பாக பாகிஸ்தான்–பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் அவர் சில தொடர்புகளை வைத்துள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.
 
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற சில தீவிரவாத நடவடிக்கைகளின் போது, ஜோதி மல்கோத்ரா சில சந்திப்புகளை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!