Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமடையும் கொரோனா; குஜராத்தில் ஊரடங்கு! – உஷாராகும் மாநிலங்கள்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (15:51 IST)
இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. முக்கியமாக கேரளா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரஜ் மற்றும் ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் மார்ச் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவிலும் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டி வரலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments