Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பலூன்?? – ராணுவ அதிகாரிகள் விசாரணை!

Advertiesment
National
, செவ்வாய், 16 மார்ச் 2021 (12:30 IST)
இந்திய – பாகிஸ்தான் எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பெயர் பொறித்த பலூன் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் அத்துமீறல் உள்ள நிலையில் இந்திய ராணுவம் தீவிரமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் வித்தியாசமான விமான வடிவிலான பலூன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் என்பதன் சுருக்கமான பிஐஏ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து திட்டமிட்டு இந்திய பகுதிக்குள் இதுபோன்ற பலூன்கள் அனுப்பப்படுகின்றனவா என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த கட்சியில் அதிருப்தியாளர்கள் இருந்தாலும் தூக்கும் பாஜக: அதிமுகவையும் விட்டு வைக்கவில்லை!