Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆயிரம் பேர் வெளியேற்றம்; குஜராத்தை நெருங்கும் ‘பிபோர்ஜாய்’ புயல்!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (07:42 IST)
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் அதி தீவிர புயல் குஜராத் அருகே கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வந்தது. வானிலை ஆய்வு மைய கணக்கீட்டின்படி இன்று மாலை பிபோர்ஜாய் புயல் பாகிஸ்தான் – குஜராத் இடையே கரையை கடக்க உள்ளது.

இதனால் குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலைக்குள் குஜராத்தின் பல பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். குஜராத் கட்ச் மாவட்டத்தில் மட்டும் அதிக பட்சமாக 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குஜராத்தின் ஜூனாகத், ஜாம்நகர், போர்பந்தர், துவாரகா, தேவ்பூமி, ராஜ்கோட், மோர்பி உள்ளிட்ட மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர். ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான மருந்து, உணவு, குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments