Webdunia - Bharat's app for daily news and videos

Install App

143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு? – மறுப்பு தெரிவித்த ஜிஎஸ்டி கவுன்சில்!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:44 IST)
சாக்லெட், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தபட உள்ளதாக வெளியான தகவலுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கும் பல்வேறு சேவைகளுக்கும் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. பொருட்களின் தன்மையை பொறுத்து 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சாக்லேட், மின்சார உபகரணங்கள், உடைகள் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்துவது குறித்து மாநில அரசுகளோடு பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவலை ஜிஎஸ்டி கவுன்சில் மறுத்துள்ளது. அவ்வாறான வரி உயர்த்துதல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், வரியை உயர்த்தும் எண்ணமும் இல்லை என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments