Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (07:50 IST)
வருமான வரித்தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி வரை மேலும் அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு மூன்று மாதங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வருமான வரித்தாக்கலுக்கான கடைசித் தேதியை மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு. 2018-19ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30ஆம் தேதிக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிப்பிடித்த ரீபண்ட் தொகையை திரும்ப கொடுக்கும் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது. அதேபோல பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன்: என்ன விலை? என்ன சிறப்பு அம்சங்கள்?

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments