Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி!! ஆன்லைனில் மது விற்பனை: அரசின் அதிரடி திட்டம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (08:13 IST)
குடிமகன்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மகாராஷ்டிர அரசு, மதுபானங்களை ஆன்லைன் விற்பனை மூலம் வீடுகளுக்கே நேரடியாக டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
 
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும் முக்கியமாக மகாராஷ்டிராவில் மது குடிப்போர் ஏற்படுத்தும் விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புக்கள் நடைபெறுகின்றன.
 
இதனை குறைக்க மகாராஷ்டிர அரசு ஒரு புதுமையான ஐடியா செய்துள்ளது. அது என்னவென்றால் ஆன்லைன் மூலம் குடிமகன்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே மதுவை நேரடியாக டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
 
இதன் மூலம் விபத்துக்களும் குறையும், அதேபோல் அரசுக்கும் மதுவால் கிடைக்கும் வருமானம் குறையாமல் இருக்கும். இந்த திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டுவரப் போவதாக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments