Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் கார் சார்ஜிங் நிலையம்! – மத்திய அரசு திட்டம்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (08:54 IST)
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சித்து வரும் நிலையில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க 2030ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் குறைவாக உள்ளதால் அதன் பயன்பாடும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையத்தை அமைப்பது குறித்து ரெயில்வே துறைக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது மின்சார வாகன பயன்பாட்டை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 22 முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments