Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்ய சேதுவை கேட்டு ஆபீஸ் வாங்க! – மத்திய அரசு உத்தரவு!

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (08:06 IST)
மத்திய அரசு ஊழியர்கள் பணிகளுக்கு செல்லும் முன் அரசின் “ஆரோக்ய சேது” செயலியில் சோதனை செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கொரோனா தாக்கம் உள்ள பகுதிகள் எவையெவை என கண்டறிவதற்காகவும், மக்கள் அவற்றை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் “ஆரோக்ய சேது” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை கண்டிப்பாக தங்கள் மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகம் புறப்படும் முன் ஆரோக்ய சேது செயலியில் சோதனையிட வேண்டுமென்றும், அதில் மிதமானது அல்லது அதிக அபாயம் என்று காட்டினால் அலுவலகம் வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் அலுவலகங்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும், சுழற்சி முறையில் பணியாளர்கள் மாற்றப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறும் விவகாரம்: திமுகவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments