அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்: சட்டசபையில் அவசர சட்டம்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (07:14 IST)
அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
கொரோனா நிவாரண நிதிக்காக கேரள அரசு ஊழியர்களின் 6 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்கான அவசர சட்டம் கேரள மாநில சட்டசபையில் நிறைவேறியதால் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே அடுத்த 5 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 6 நாட்களுக்கான அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என, கேரள அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன. 
 
இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்களின் ஊதிய பிடித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, கேரள ஐகோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டதை அடுத்து, நேற்று கேரள அமைச்சரவை கூடி, அடுத்த 5 மாதங்களுக்கு, அரசு ஊழியர்களின் 6 நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கான அவசர சட்டம் தொடர்பான தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
 
இதனையடுத்து இந்த தீர்மானம் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுனர் ஒப்புதல் அளித்தவுடன் இம்மாதம் முதல் அதாவது ஏப்ரல் மாத ஊதியத்தில், 6 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments