பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Siva
வியாழன், 20 பிப்ரவரி 2025 (17:04 IST)
பெங்களூரில் 16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட அலுவலகத்தை கூகுள் நிறுவனம் திறந்து உள்ளதாகவும், இந்த அலுவலகத்திற்கு "அனந்தா" என்ற சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்திற்கு உலகின் பல நகரங்களில் கிளைகள் உள்ளன. லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள கூகுள் கிளைகளில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில், பெங்களூரில் தற்போது புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. மகாதேவ்புரா என்ற பகுதியில், 16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட இந்த அலுவலகத்தில் 5000 பேர் பணியாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்திற்கு "அனந்தா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. "அனந்தா" என்றால் சமஸ்கிருதத்தில் "எல்லையில்லாதது" என்ற அர்த்தம் கொண்டது. கூகுளின் ஆண்ட்ராய்டு, தேடுதல், மேப் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த அலுவலகத்தில் பணியாற்றுவார்கள் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments