Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

Prasanth K
ஞாயிறு, 15 ஜூன் 2025 (16:07 IST)

மணாலியில் ஸிப்லைனில் சென்ற த்ரிஷா என்ற பெண் கயிறு அறுந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கி வரும் நிலையில் அங்கு ஸிப்லைன் உள்ளிட்ட மலை சாகச விளையாட்டுகள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.

 

இந்நிலையில் சமீபத்தில் நாக்பூரை சேர்ந்த த்ரிஷா என்ற பெண் ஸிப்லைனரில் பயணித்தார். பாதி வழியில் அந்தரத்தில் அவர் தொங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது கட்டியிருந்த கயிறு அறுந்தது. இதில் த்ரிஷா 30 அடி உயரத்திலிருந்து கீழே இருந்த பாறைகள் மீது விழுந்தார்.

 

படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments