Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவிடம் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நிலை உருவாகியுள்ளது - ராகுல் காந்தி

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (15:57 IST)
பாஜக மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகளை காப்பாற்றும் நிலை உருவாகி உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
 
தேசம் பற்றி எரிந்தாலும், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டாலும் தலித்துகள், சிறுபான்மையினர் உரிமைகள் அச்சுறுத்தப்பட்டாலும் மோடி மீண்டும் பிரதமராவதிலேதான் ஆர்வம் காட்டுகிறார். மோடி ஆட்சியில் அரசியல் சாசனம் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுவிட்டன.
 
உச்சநீதிமன்றத்தை சீர்குலைத்துவிட்டனர். நாடாளுமன்றத்தை இழுத்து மூடிவிட்டனர். பெண்களை பாதுகாப்போம், பெண்களுக்கு கல்வியை கொடுப்போம் என்கிற முழக்கத்தை பாஜக முன்வைத்தது. இப்போது பாஜக மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகள் காப்பாற்றும் நிலை உருவாகி உள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments