Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேயாக நடித்து பலாத்காரத்தில் இருந்து தப்பித்த 17 வயது சிறுமி!

பேயாக நடித்து பலாத்காரத்தில் இருந்து தப்பித்த 17 வயது சிறுமி!
, சனி, 28 மே 2016 (15:15 IST)
நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் பலாத்கார சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தன்னை பலாத்காரம் செய்ய வந்த நபர்களிடம் பேயாக நடித்து தப்பித்துள்ளார்.


 
 
டெல்லியின் பஞ்சாபி பாக் என்ற பகுதியில் இரவு 10 மணியளவில் 17 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
 
அவர்கள் தன்னை பலாத்காரம் செய்ய போகிறார்கள் என்பதை உணர்ந்த சிறுமி புத்திசாலித்தானமா செயல்பட்டு அதில் இருந்து தப்பித்துள்ளார். திடீரென சத்தமான குரலில் பேசியும், சிரித்தும் பேய் போல் நடித்து அவர்களை பயமுறுத்தி உள்ளார். இதனால் பயந்த ஒருவன் தப்பித்துள்ளான்.
 
ஓடாமல் நின்ற மற்றொருவனை தன்னுடைய ரத்தத்தால் முகத்தில் பூசி மீண்டும் பயமுறுத்தியுள்ளார் அந்த சிறுமி, இதனால் அந்த நபரும் பயந்து தப்பித்து ஓட, சிறுமி பலாத்கார சம்பவத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

webdunia

 
 
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் நெருங்கிய தோழி தன்னுடை ஃபேஸ்புக்கில் விவரித்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் சிறுமியின் வீர செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த போஸ்டை லைக் செய்துள்ளனர், 2395 பேர் ஷேர் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான கழிவறையில் தங்கக் கட்டிகள் கடத்தல் - 3½ கிலோ தங்கம் பறிமுதல்