Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Gen Z எனப்படும் இளைஞர்கள் ஜனநாயகத்தை மீட்டெடுப்பார்கள்: ராகுல் காந்தி நம்பிக்கை..!

Advertiesment
ராகுல் காந்தி

Mahendran

, புதன், 5 நவம்பர் 2025 (13:43 IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் சக்தி Gen Z எனப்படும் இளைஞர்களிடம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
ஹரியாணா தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் மூலம் 'வாக்குத் திருட்டு' நடந்ததாக குற்றம்சாட்டி, 'எச் பைல்ஸ்' ஆவணங்களை ராகுல் காந்தி இன்று வெளியிட்டார்.
 
"இந்த 'வாக்குத் திருட்டை Gen Z இளைஞர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இது உங்கள் எதிர்காலத்தை பற்றியது; உங்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
 
இந்தியாவின் இளைஞர்களுக்கு உண்மை மற்றும் அகிம்சையின் வழியில் நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் உள்ளது" என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
 
போலி வாக்காளர்களை நீக்குவதற்கான செயலியை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை என்றும், நியாயமான தேர்தலை நடத்த ஆணையம் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாத்மா காந்தியின் 3 குரங்குகள்.. ராகுல், அகிலேஷ், தேஜஸ்வியை விமர்சித்த யோகி..!