Publish Date: Fri, 28 Apr 2023 (21:52 IST)
Updated Date: Fri, 28 Apr 2023 (21:56 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 38-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதி வருகின்றன. பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரன், டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதில், கே.ஏல்.ராகுல் 12 ரன்களும், கேல் மேயர்ஸ் 54 ரன்களும், படோனி 43 ரன்களும், ஸ்டோனிஸ் 72 ரன்களும், பூரன் 45 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்து, பஞ்சாப் அணிக்கு 258 ரன்கள் இலக்கு நிர்ணயித்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில், ஆர்ஷ்டீப் சிங், குரான், லிவிங்க்ஸ்டன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ரபாடா 2 விக்கெட் கைப்பற்றினர்.
தற்போது பேட்டிங் செய்துவரும் பஞ்சாப் அணியில், 2.6 ஓவருக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.