Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (08:53 IST)
டெல்லியில் வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு பேருந்துகளில் இலவசமாக பொதுமக்கள் பயணம் செய்யலாம் என டெல்லி முதலமச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்


 


டெல்லியில் மாசு அளவு அதிகரித்ததன் காரணமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே டெல்லியில் சோதனை ஓட்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறை வரும் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதை அடுத்து டெல்லி மக்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 13ஆம் தேதி திங்கள் முதல் 17ஆம் தேதி வெள்ளிவரை ஐந்து நாட்கள் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பால் டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments