Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீசார் நடத்திய என்கவுண்டர்: 4 ரவுடிகள் சுட்டு கொலை

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (16:05 IST)
நாடு முழுவதும் அவ்வப்போது என்கவுண்டர் நடத்தப்பட்டு ரவுடிகள் சுட்டு கொல்லப்படும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று டெல்லியில் நடத்தப்பட்ட ஒரு என்கவுடரில் நான்கு ரவுடிகள் சுட்டு கொலை செய்யபட்டனர்.
 
டெல்லி சத்தர்பூர் பகுதியில் இன்று போலிசாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசார் தரப்பில் 6 பேர் காயம் அடைந்ததால், ரவுடிகளை என்கவுண்டர் செய்ய உத்தரவிடப்பட்டது.
 
இந்த என்கவுண்டரில் நான்கு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ரவுடிகளில் ஒருவரான ராஜேஷ் பார்தி என்பவர் மீது கொலை, கொள்ளை , ஆள்கடத்தல் என 25 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்தான் இந்த பகுதியில் உள்ள ரவுடிகள் கும்பலுக்கு தலைவன் என்றும் கூறப்படுகிறது. இந்த என்கவுண்டரால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments