Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர் வைத்த வனக்காவலர் சஸ்பெண்ட்: மாநில அரசு அதிரடி..!

சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர் வைத்த வனக்காவலர் சஸ்பெண்ட்: மாநில அரசு அதிரடி..!

Mahendran

, திங்கள், 26 பிப்ரவரி 2024 (14:32 IST)
சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என்று சர்ச்சைக்குரிய பெயரை வைத்த தலைமை வனக்காவலரை திரிபுரா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
திரிபுரா மாநிலத்தில் உள்ள மிருக காட்சி சாலையில் இருந்த ஆண் சிங்கம் மற்றும் பெண் சிங்கத்திற்கு அக்பர் மற்றும் சீதா என்று வன காவலர் பெயர் வைத்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பதும் இதனை அடுத்து சிங்கங்களுக்கு பெயர் வைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என்று பெயர் வைத்த விவகாரம் தொடர்பாக திரிபுரா மாநிலத்தின் முதன்மை தலைமை காவலர் பிரவீன் லால் அகர்வால் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது சிங்கங்களுக்கு பெயர் மாற்ற பூங்கா குழுவினர் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்காமல் திணறும் அதிமுக.. பின்வாங்கும் பிரபல தலைகள்..!