Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூ விற்கும் பெண்ணிடம் ரு. 30 கோடி பணம் ! அதிகாரிகள் அதிர்ச்சி !

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (17:11 IST)
பெண்ணின் வங்கி கணக்கில் 30 கோடி வரவு

கர்நாடக மாநிலத்தில் சந்தையில் பூ விற்று வந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ. 30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 
கர்நாடக மாநிலம் சன்னபட்னா என்ற பகுதியில் வசித்து வருபவர் மாலிக் புர்கான். இவருடைய மனைவி ராகியம்மாள்.  இவர்கள் இருவரும் பூ விற்று வருகிறார்கள்.
 
இந்நிலையில், ராக்கியம்மாள் வங்கி கணக்கிற்கு மிகப் பெரிய தொகை ஒன்று கைமாறியதாக கூறி வங்கி அதிகாரிகள் அவரை வங்கிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்தனர்.
 
அதில், அவருடைய வங்கி கணக்கில் ரூ.30 கோடி பணம் வரவு வைகப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது கணவர் கூறியுள்ளதாவது: ஆன்லைனில் சீலை வாங்கியதற்கு பரிசு கிடைத்துள்ளதாகக் கூறி, சிலர்  வங்கி புத்தகத்தை வாங்கிச் சென்றதாக மாலிக் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து வருமான வரித்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments