3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானம் ரத்து: மத்திய அமைச்சர் உத்தரவு..!

Mahendran
வியாழன், 21 நவம்பர் 2024 (12:08 IST)
மூன்று மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதமானால், அந்த விமானத்தை ரத்து செய்து விடலாம் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக விமானம் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், பயணிகளை அலைக்கழிக்க வேண்டாம் என்றும், மூன்று மணி நேரத்திற்கு மேல் விமானம் தாமதமானால், விமானத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு முன்பே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விமான தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், செக்-இன் கவுண்டர்களில் அதிக பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் விமான நிறுவனங்களிடம் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். மூன்று மணி நேரத்துக்கு மேல் விமானத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டால், பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு விமானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments