Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மத்திய இணையமைச்சர்!

முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மத்திய இணையமைச்சர்!
, புதன், 23 செப்டம்பர் 2020 (21:26 IST)
முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மத்திய இணையமைச்சர்!
மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு பலியாகியுள்ளதை அடுத்து முதன்முறையாக மத்திய இணையமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் அங்கடிக்கு அஞ்சலி செலுத்து சக எம்.பிக்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
 
65 வயதான சுரேஷ் அங்கடி கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி என்ற தொகுதியில் இருந்து 4வது முறையாக மக்களவைக்கு தேர்வாகியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் 4வது எம்.பி இவர் என்பதும், ஏற்கெனவே வசந்தகுமார், துர்கா பிரசாத், அசோக் கஸ்தி ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக யாருக்கும் மத்யஸ்தம் செய்யவில்லை... முருகன் சுளீர்!