Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ பிடித்து எரிந்த ரயில்: பயணிகளின் நிலை என்ன??

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (12:03 IST)
ஹரியானாவில் புது டெல்லி வரை செல்லும் ரயில் ஒன்று தீ பிடித்து எரிந்தது.

ஹரியானா மாநிலம் அசாவொதி ரயில் நிலையத்தில், ஹைதராபாத்திலிருந்து டெல்லி வரை செல்லும் தெலுங்கானா எகஸ்பிரஸில் இரண்டு பெட்டிகள், திடீரென இன்று காலை 7.45 மணியளவில் தீ பிடித்து எரிந்தது.

இதனை கண்ட ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். அதில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். பின்பு உடனடியாக வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments