Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தையல் கடையில் தீ விபத்து...மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழப்பு

sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (19:47 IST)
தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழந்தனர்.
 
மாராட்டிய  மாநிலம், சதர்பதி சம்பாஜி நகர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள டானா பாஜாரில் தையல் கடை செயல்பட்டு வந்தது.
 
இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து, இந்த தீ வேகமாகப் பரவியது. இவ்விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  7 பேர் புகையால் மூச்சுத்திணறி பலியாகினர்.
 
இவ்விபத்து பற்றித் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து  பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments