சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் உயிரிழப்பு

Sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (19:39 IST)
சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். 
 
இந்த நிலையில்உடல் நிலை சரியில்லாமல், ராஜேந்திரன்  என்ற முதியவர் இம்மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு பெருமாள் ஆங்கில மருத்துவமனான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
 
ஊசி போட்ட 10 நிமிடங்களில் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார். ஊசி போட்டதால் உயிரிழந்த ராஜேந்திரனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments