Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் உயிரிழப்பு

Sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (19:39 IST)
சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். 
 
இந்த நிலையில்உடல் நிலை சரியில்லாமல், ராஜேந்திரன்  என்ற முதியவர் இம்மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு பெருமாள் ஆங்கில மருத்துவமனான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
 
ஊசி போட்ட 10 நிமிடங்களில் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார். ஊசி போட்டதால் உயிரிழந்த ராஜேந்திரனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments