Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:26 IST)
குஜராத் மாநிலத்தில் இன்று மின்சார ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த ரயிலில் உள்ள பெட்டிகள் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு புறப்பட யாராக இருந்தது. அப்போது திடீரென ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு பக்கத்து பெட்டிகளுக்கும் பரவியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினார். 
 
இந்த தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பல பெட்டிகள் தீ விபத்தால் சேதம் அடைந்தன. 
 
ஆனால் அதே நேரத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments