Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோரிகான் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:07 IST)
கோரிகான் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஏக் நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தின் மும்பை கோரிகான் பகுதியில்  உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிகி 7 பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மீட்புப் பணிகளின்போது, தீக்காயங்களுடன் 46 பேர் மீட்கப்படு மருத்துவமனைககளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  7 பேர் பகியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், ஜெய் பவானி கட்டடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாகவும், இது அருகில் உள்ள கட்டங்களுக்கும் இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'கோரிகான் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் 'என்று முதல்வர் ஏக் நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மேலும், ' காயமடைந்த அனைவருக்கும் அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments