Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுத்தை குட்டி வாயில் செல்போனை திணித்த கொடுமை: இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 பரிசு!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (14:24 IST)
சிறுத்தை குட்டியை பிடித்து துன்புறுத்திய இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 ரூபாய் சன்மானம் வனத்துறை அறிவித்துள்ளது.

குஜராத்தின் ஜுனாகத் காட்டுப்பகுதியில் புகுந்த இளைஞர்கள் சிலர் அங்கு புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை குட்டி ஒன்றை பிடித்திருக்கிறார்கள். அதன் வாயில் செல்போனை கொடுத்து கடிக்க செய்வது போன்ற துன்புறுத்தல்களை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

சிறுத்தை குட்டியை அவர்கள் பிடித்த இடம் கிர் சோம்னாத் அல்லது ஜுனாகத் மாவட்டம் என கருதப்படுகிறது. அந்த வீடியோவில் காணப்படும் இளைஞர்களை பிடித்து கொடுத்தால் 25000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என குஜராத் வனத்துறை அறிவித்துள்ளது. அவர்கள் கொடுமைப்படுத்திய அந்த சிறுத்தைக்குட்டி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து விலங்கியல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

வழக்கம் போல ஸ்டிக்கரை தூக்காதீங்க ஸ்டாலின்.. பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து ஈபிஎஸ்

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments