Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி அலுவலர்களை திருமணம் செய்ய ஃப்ட்வா கொடுத்த இஸ்லாமிய மதகுரு

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (18:41 IST)
கொல்கத்தாவில் வங்கியில் வேலை செய்பவர்களையோ அல்லது குடும்பத்தில் யாரேனும் வங்கி பணியில் இருந்தாலோ அவர்களுடன் திருமணம் செய்யக்கூடாது என இஸ்லாமிய மதகுரு ஃபட்வா கொடுத்துள்ளார்.

 
இஸ்லாமிய முறையில் ஒரு செயலை செய்யக் கூடாது என்றால் அதற்கு ஃபட்வா கொடுப்பது வழக்கம். தரூர் உலூம் தியோபந்த் என்ற மதகுரு அண்மையில் இஸ்லாமியர்களுக்கு ஃபட்வா ஒன்றை கொடுத்துள்ளார். அதில் வங்கி அலுவர்களை திருமணம் செய்ய ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
 
வங்கியில் அதிக வட்டி வசூலிக்கப்பட்டு அதில் இருந்து இவர்களுக்கு சம்பளம் வழங்கபடுகிறது என்று ஃபட்வா கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் அப்துல் சயீத் கான், இதுபோன்ற ஃப்ட்வா கொடுப்பவர்கள் நிஜ வாழ்க்கையை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.  
 
போதுமான படிப்பறிவில்லாத, ஏழை இஸ்லாமிய மக்களை குறி வைத்தே இதுபோன்ற அறிவிப்புகள் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்திய வங்கிகள் சங்கம், இதுபோன்ற அறிவிப்புகளில் எல்லாம் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை எனினும் இதனை வன்மையான கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments